உங்கள் துரோகத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன், என் பயமெல்லாம் உங்கள் மீது நான் மீண்டும் அன்பு செலுத்திடுவேனோ என்பது தான்.
காதலால் சதோஷம் அடைத்த இதயங்களின் கண்ணீர் துளிகள்! காதல் கதைகள், என்உயிரே,தோழி மனைவி,நம்பிக்கை, பிடித்தவர்கள் பிரிவு, மனவலிமை,புது வாழ்கை
Tuesday, 24 November 2015
Saturday, 14 November 2015
⚡ நீதிக் கதை ⚡⚡
⚡ஒரு கிராமத்தில்ஓநாய் ஒன்று தன் குட்டியுடன் வாழ்ந்துவந்தது.
ஒரு நாள் ஓநாய்குட்டி தன் தாயிடம்
"எனக்கு மனிதனுடைய மாமிசம் சாப்பிட வேண்டும்" என்றது.
ஓநாய் அலைந்து திரிந்தும் மனிதமாமிசம் கிடைக்காததால் பன்றியின் மாமிசத்தை கொண்டுவந்து கொடுத்தது.
அதை முகர்ந்து பார்த்த குட்டி
"இது பன்றிக்கறி எனக்கு வேண்டாம்.
மனிதமாமிசம்தான் வேண்டும் என்றது.
மீண்டும் அலைந்துதிரிந்த ஓநாய் மனிதமாமிசம் கிடைக்காததால் மாட்டிறைச்சியை கொண்டுவந்து கொடுத்தது.
அதை உண்ண மறுத்த குட்டி
மனித இறைச்சிக்காக அடம்பிடித்தது.
அப்போது ஓநாய் மனதில் ஒரு திட்டம் தோன்றியது.
அன்றிரவு அங்குள்ள பள்ளிவாசலில் பன்றிக் கறியையும்
கோவிலில் மாட்டிறைச்சியையும் வைத்துவிட்டு வந்துவிட்டது.
மறுநாள் காலை சென்று பார்க்கும்போது ஊர் முழுவதும் மனிதஉடல்கள் சிதறிகிடந்தன.
ஓநாயும் குட்டியும் ஆசைத்தீர மனிதமாமிசத்தை உண்டு தங்களது பசியை தீர்த்துகொண்டன.
இது எப்படி சாத்தியமாயிற்று என்று குட்டி தன் தாயிடம் வினவியது.
அதற்குஓநாய்
"90% முட்டாள்கள் வாழும் தேசத்தில் எல்லாமே சாத்தியம்தான்"
என்று சொல்லி சிரித்தது.
ஒரு நாள் ஓநாய்குட்டி தன் தாயிடம்
"எனக்கு மனிதனுடைய மாமிசம் சாப்பிட வேண்டும்" என்றது.
ஓநாய் அலைந்து திரிந்தும் மனிதமாமிசம் கிடைக்காததால் பன்றியின் மாமிசத்தை கொண்டுவந்து கொடுத்தது.
அதை முகர்ந்து பார்த்த குட்டி
"இது பன்றிக்கறி எனக்கு வேண்டாம்.
மனிதமாமிசம்தான் வேண்டும் என்றது.
மீண்டும் அலைந்துதிரிந்த ஓநாய் மனிதமாமிசம் கிடைக்காததால் மாட்டிறைச்சியை கொண்டுவந்து கொடுத்தது.
அதை உண்ண மறுத்த குட்டி
மனித இறைச்சிக்காக அடம்பிடித்தது.
அப்போது ஓநாய் மனதில் ஒரு திட்டம் தோன்றியது.
அன்றிரவு அங்குள்ள பள்ளிவாசலில் பன்றிக் கறியையும்
கோவிலில் மாட்டிறைச்சியையும் வைத்துவிட்டு வந்துவிட்டது.
மறுநாள் காலை சென்று பார்க்கும்போது ஊர் முழுவதும் மனிதஉடல்கள் சிதறிகிடந்தன.
ஓநாயும் குட்டியும் ஆசைத்தீர மனிதமாமிசத்தை உண்டு தங்களது பசியை தீர்த்துகொண்டன.
இது எப்படி சாத்தியமாயிற்று என்று குட்டி தன் தாயிடம் வினவியது.
அதற்குஓநாய்
"90% முட்டாள்கள் வாழும் தேசத்தில் எல்லாமே சாத்தியம்தான்"
என்று சொல்லி சிரித்தது.
Wednesday, 11 November 2015
ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி
ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? அதிகமாக ஷேர் செய்யவும்…!!
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferen ces ஓபன் பண்ணுங்கள்.
3. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock..
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferen
3. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock..
Sunday, 1 November 2015
திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும்...
காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.
பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,
என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் ,இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?
* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது
உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!
* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..
அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
* உன் குரல் கேட்காத நாட்களில்,
நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!
* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே
காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.
பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,
என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் ,இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?
* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது
உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!
* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..
அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
* உன் குரல் கேட்காத நாட்களில்,
நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!
* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே
Subscribe to:
Posts (Atom)
