ஒரு முனிவர் குளத்தில் குளித்துக்கொண்டு இருக்கும் போது,
ஒரு தேள் தண்ணீரில் தத்தளித்ததாம்
உடனே,
அதை கண்ட முனிவர்
அதை காப்பாற்ற
தேளை கையில் எடுக்க
தேள் கொட்டியதாம்.
வலி தாங்காத முனிவர்
கையை உதறும் போது
தேள் தண்ணீரில் விழுந்தது.
திரும்பவும்
முனிவர் காப்பாற்ற
தேளை எடுக்க
திரும்பவும் தேள்
கொட்டியதாம்.
இப்படியே
மாறிமாறி நடந்த நிகழ்ச்சியை
பார்துகொண்டு இருந்த
ஒருவர்,
முனிவரை பார்த்து
ஏண் முனிவரே
அந்த தேள்தான்
கொட்டிக்கொண்டே இருக்கிறதே
ஏண் அதை மீண்டும் மீண்டும்
காப்பாற்ற நினைக்கிறீர்கள்?
என கேட்டான்.
முனிவர் சொன்னார்
கொட்டுவது தேளின் குணம்,
அதை காப்பாற்றுவது மனித குணம்.
No comments:
Post a Comment