Monday, 17 August 2015

காலம் மாறலாம் ஆனால் நான் உன் மேல் கொண்ட காதல் மாறாது.... ஒரு திருமண நிகழ்ச்சியில்... காதலில் தோல்வியுற்ற ஒருவன் கலந்து கொண்டான்... அந்த திருமணத்திற்க்கு அவன் காதலித்த அந்த பெண் அவளது கணவனுடன் வந்திருந்தாள்.. தூரத்திலுருந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்... ஒருவருக்கொருவர் மனதில் நொந்து போனார்கள்... அவன் உணவு பரிமார செல்கிரான்.. அப்பொழுது அங்கே அவள் இரண்டாவது வரிசையில் அவளது கணவுனுடன் அமர்ந்திருந்தாள்.. அதைபார்த்த அவனது கண்கள் களங்க ஆரம்பித்தன..அவன் உணவை எடுத்துக்கொண்டு அவர்களிடத்தில் சென்றான்...அவளது கணவன் அவனிடம் நலம் விசாரித்தார்..அவனும் அவரிடம் விசாரித்தான்.. ஆனால் அவளது முகத்தை கூட பார்க்கவில்லை.. எங்கே அவளை பார்த்தாள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கொட்டிவிடுமோ என்று. பின் அவளது கணவனுடன் வீட்டிற்க்கு செல்லும் பொழுது அவள் வண்டியில் அமர்ந்த படி அவனை தேட ஆரம்பித்தாள்.. அவனோ அவள்கண்களில் படாமல் மரைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தான்..அப்ப ொழுது அவள் கண்களில் வழிந்தோடிய கண்ணீரை கண்ட அவன்.. தீயில் விழுந்த ஒரு புழுவைபோல துடிதுடித்தான்.. இந்த இருவரின் வேதனைக்கும் என்ன காரணம் தெரியுமா? ஒருவரை ஒருவர் மனதலவில் மட்டும் காதலித்துவிட்டு காதலை வெளிப்படுத்தாமல் விட்டதுதான்.. காதலை மறைக்காதே! கண்ணீரில் மூழ்காதே!

No comments:

Post a Comment